சிவராத்திரியை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் தாமரை பூ விலை கடும் உயர்வு..


சிவராத்திரியை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் தாமரை பூ விலை கடும் உயர்வு..
x

சிவராத்திரியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் தாமரை பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி,

இன்று மாசி மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சிவராத்திரியையொட்டி இன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் தாமரை பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ரூ.5-க்கு விற்கப்பட்ட தாமரை பூ, தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story