பிரதோஷத்தையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு


பிரதோஷத்தையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரதோஷத்தையொட்டி நேற்று பெரியகுளம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

பிரதோஷத்தையொட்டி, நேற்று பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி விங்கேஸ்வரர், அதிகார நந்தீஸ்வரருக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் மலைக் கோவிலில் பிரதோஷத்தையொட்டி கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பெரியகுளம் தென்கரை காளஹஸ்தீஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.

1 More update

Related Tags :
Next Story