கம்பத்தில்வாலிபரிடம் செல்போன் பறிப்பு

கம்பத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னமனூர் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). நேற்று முன்தினம் இரவு இவர், தனது நண்பருடன் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள கடையில் டீ குடித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ராஜ்குமார் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





