கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி சாவு


கம்பத்தில்  மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி சாவு
x

கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தேனி

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது 48). கட்டிட தொழிலாளி. இவர், தேனி மாவட்டம் கம்பத்தில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இன்று இவர், கம்பத்தில் தனியார் பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த கட்டிடத்தில் தற்காலிகமாக பொருத்தப்பட்டிருந்த மின் வயர் அவர் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story