திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம் - டிடிவி தினகரன்


திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம் - டிடிவி தினகரன்
x

திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற நம்முடைய எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற நம்முடைய நெடுநாள் எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொதுமறை என்று சொல்லத்தக்க வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய திருக்குறளைத் தந்திட்ட திருவள்ளுவரின் தினமாக இன்றைய நாளை கொண்டாடுகிறோம்.

திருக்குறள் காட்டும் உயர்ந்த நெறிகளோடு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வினை அமைத்துக்கொள்வோம். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையான திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற நம்முடைய நெடுநாள் எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம்" என்று கூறியுள்ளார்.



Next Story