ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை


ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை
x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமாி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 8-ந் தேதி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. 8-ந் தேதி அன்று அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு 10-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

குமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டத்தின் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 8-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story