ஓணம் பண்டிகை: கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்


ஓணம் பண்டிகை: கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
x

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சேலம்,

கேரள மாநிலம் கொச்சுவேலி- பெங்களூரு (பையப்பனஹள்ளி) சிறப்பு ரெயில் (06037) கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு சேலம் வந்தடையும்.

பின்னர் இங்கிருந்து 4.33 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக நாளை மறுநாள் காலை 10.10 மணிக்கு பெங்களூரு பையப்பனஹள்ளி ரெயில் நிலையம் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரெயில் (06038) பெங்களூரு பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக இரவு 7.05 மணிக்கு சேலம் வந்தடையும்.

பின்னர் இங்கிருந்து 7.08 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக நாளை மறுநாள் காலை 6.35 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story