ஓணம் பண்டிகை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை


ஓணம் பண்டிகை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை
x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

சென்னை,

நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஓணம் பண்டிகை என்பதால் கேரள மக்கள் மகிழ்ச்சியுடன் திருநாள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்தும், சிறப்புத்தும், வருகிறார்கள்.

ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை , கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story