ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

அம்பை அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.
அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை பூங்காவனம் தெருவை சேர்ந்த கணேசன் மகன் சுந்தரமூர்த்தி என்ற சுப்புராஜ் (வயது 40). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை அப்பகுதியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நெல்லையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற சரக்கு ெரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





