மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு


மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு
x

விருதம்பட்டில் மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் விருதம்பட்டு வெண்மணி மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). இவர், நேற்று முன்தினம் குளியல் அறையில் லைட் போடுவதற்காக 'சுவிட்ச்' ஆன் செய்துள்ளார். அப்போது, 'சுவிட்ச்' பாக்சில் ஏற்பட்ட மின் கசிவால் கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story