வந்தேபாரத் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி


வந்தேபாரத் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி
x
தினத்தந்தி 16 July 2023 12:23 AM IST (Updated: 17 July 2023 12:36 PM IST)
t-max-icont-min-icon

வந்தேபாரத் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.

ராணிப்பேட்டை

வந்தேபாரத் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.

சென்னையிலிருந்து கோவை நோக்கி நேற்று பிற்பகல் வந்தே பாரத் ெரயில் புறப்பட்டு காட்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. வாலாஜாவை கடந்து முகுந்தராயபுரம் நோக்கி வந்தபோது மாலை 3.40 மணியளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ெரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அதிவேகமாக வந்த வந்தே பாரத் ெரயிலில் அடிபட்டு அவர் அந்த இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த காட்பாடி ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story