வாகனம் மோதி ஒருவர் படுகாயம்


வாகனம் மோதி ஒருவர் படுகாயம்
x

வாகனம் மோதி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43). இவர் சம்பவத்தன்று தோகைமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், ேதாகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story