வேன் மோதி ஒருவர் பலி


வேன் மோதி ஒருவர் பலி
x

காவேரிப்பட்டணம் அருகே வேன் மோதி ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

வேன் விபத்து

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா குப்பச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ருத்ரமூர்த்தி (வயது 48). இவரும், அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் (40) என்பவரும் வேனில், கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா மயிலம்பாடியை சேர்ந்த கோபிநாத் (27) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அந்த வேன், தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பையூர் கிராம வங்கி பக்கமாக வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு மீது மோதியது.

ஒருவர் பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ருத்ரமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். லோநாதன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story