ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி


ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
x

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலியானார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு (வயது 34). இவர் நேற்று மாலை தனது ஊரில் இருந்து வாணியம்பாடிக்கு தனியார் பஸ்சில் வந்தார்.

பெருமாள்பேட்டை கூட்ரோடு என்ற இடத்தில் பஸ் நிற்கும் முன்பு இறங்கியபோது தவறி விழுந்து பஸ்சின் சக்கரத்தில் சிக்கி ரகு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story