சங்கராபுரம் அருகேமின்சாரம் தாக்கி வாலிபர் சாவுகாதணி விழாவில் மின்விளக்கு அமைத்த போது விபரீதம்


சங்கராபுரம் அருகேமின்சாரம் தாக்கி வாலிபர் சாவுகாதணி விழாவில் மின்விளக்கு அமைத்த போது விபரீதம்
x
தினத்தந்தி 30 July 2023 6:45 PM GMT (Updated: 30 July 2023 6:45 PM GMT)

சங்கராபுரம் அருகே காதணி விழாவில் மின்விளக்கு அமைத்த போது, மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

ரிஷிவந்தியம் அருகே உள்ள தொண்டநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் வின்சென்ட்ராஜ் (வயது 23). இவரது அண்ணன்கள் ராபர்ட்நஸ்ரின், பிரவீன்குமார் ஆவார்கள். இவர்கள் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் காதணி விழா நடைபெற்றது. அங்கு வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

சாவு

உடன் அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சங்கராபுரம் போலீசில் இவரது அண்ணன் ராபர்ட்நஸ்ரின் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story