அரவைக்காக ஆயிரம் டன் நெல்


அரவைக்காக ஆயிரம் டன் நெல்
x

அரவைக்காக ஆயிரம் டன் நெல்

திருவாரூர்

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் மூவாநல்லூர், இடையர்நத்தம் ஆகிய திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட ஆயிரம் டன் சன்ன ரக நெல் 80 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 27 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் ராஜபாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story