சுள்ளான் ஆற்றில் மண்டி உள்ள வெங்காய தாமரை செடிகள்


சுள்ளான் ஆற்றில் மண்டி உள்ள வெங்காய தாமரை செடிகள்
x

சுள்ளான் ஆற்றில் மண்டி உள்ள வெங்காய தாமரை செடிகள்

தஞ்சாவூர்

மெலட்டூர்

வடக்குமாங்குடி அருகே சுள்ளான் ஆற்றில் மண்டி உள்ள வெங்காய தாமரை செடிகளை மழை காலம் தொடங்குவதற்கு முன்பே அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுள்ளான் ஆறு

பாபநாசம் வட்டத்தின் முக்கிய பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் சுள்ளான் ஆறும் ஒன்றாகும். இந்த ஆறு மூலம் பாபநாசம் மற்றும் வலங்கைமான் வட்டத்தில் 1936 எக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாபநாசம் தாலுகாவில் மட்டும் வேம்பகுடி, புரசக்குடி, அகரமாங்குடி, சோலைபூஞ்சேரி, பொன்மான்மேய்ந்தநல்லூர், மட்டையாண்திடல், மேலசெம்மங்குடி உள்பட பல கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் வடிகால் வசதிபெறுகின்றன.

வெங்காய தாமரை செடிகள்

தற்போது சுள்ளான் ஆற்றில் வேம்பகுடியில் இருந்து வடக்குமாங்குடி வரையில் ஆற்றின் பல பகுதிகளில் அதிகளவில் வெங்காய தாமரை செடிகள் மண்டி கிடக்கின்றன. இதனால் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லவும், மழைக்காலங்களில் தண்ணீர் வடிய வைக்கவும் தடையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு விளைநிலங்களில் மழைநீர்புகுந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

அகற்ற வேண்டும்

எனவே நடப்பு ஆண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுள்ளான் ஆற்றில் வேம்பக்குடி முதல் வடக்குமாங்குடி வரையிலான வடிகால் பகுதிகளில் தண்ணீர் செல்ல தடையாக உள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story