திடீர்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு


திடீர்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு
x

திடீர்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கூவாகம் செல்லும் சாலையில் உள்ள திடீர்குப்பம் கிராமத்தில் அரசு மதுபான கடையை திறப்பதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் இடம் தேர்வு செய்து கடையை திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம், தாசில்தார் துரை, ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பா.ம.க. சார்பாக ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் முன்னிலையில் ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்தனர். மேலும் இப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்தால் முற்றுகை போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.


Next Story