கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில்109 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை


கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில்109 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 5 Jun 2023 5:00 AM GMT (Updated: 5 Jun 2023 5:00 AM GMT)

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில்109 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வங்கி மேலாண்மை, நிதி சேவை வகுப்புகள் நடத்தப்பட்டன. பயிற்சி வகுப்புகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற 109 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை கல்லூரியின் முதல்வர் அனுராதா வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் குமரன் மற்றும் பயிற்றுனர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.



Related Tags :
Next Story