கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையம்


கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையம்
x

கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானம் ஊராட்சி கோவிலூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆட்சியில் ராஜபாளையம் தொகுதியில் 2 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டது தற்போது சேத்தூர், மேட்டுப்பட்டி, முகவூர், வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தெற்கு வெங்காநல்லூர் மற்றும் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிதாக நெல்கொள்முதல் நிலையம் இந்த வாரத்தில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் அலுவலர் செந்தில்குமார், அவைத்தலைவர் மிசா நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Next Story