அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

நீடாமங்கலத்தில் இருந்து ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூர்

நீடாமங்கலம்;

திருவாரூர் மாவட்டம் பாமணி மத்திய சேமிப்புக்கிடங்கு, சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், பெருகவாழ்ந்தான், ஆதனூர், ராஜகோபாலபுரம், அசேஷம், தெற்குநத்தம், இடையர் நத்தம், ஆகிய ஊர்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நெல் அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story