நீடாமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு அரவைக்காக 1,000 டன் நெல்


நீடாமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு   அரவைக்காக 1,000 டன் நெல்
x

நீடாமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு அரவைக்காக 1,000 டன் நெல் அனுப்பி வைப்பு

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் விருதுநகருக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கும் பணி இன்று நடந்தது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் தெற்கு நத்தம், இடையர் நத்தம், மூவாநல்லூர், பாமணி, அரவத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1,000 டன் நெல் 79 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதையடுத்து சரக்கு ரெயில் விருதுநகருக்கு புறப்பட்டு சென்றது.


Next Story