ஜீவனாம்சம் கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததால் பெயிண்டர் தற்கொலை


ஜீவனாம்சம் கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததால் பெயிண்டர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2023 9:15 PM GMT (Updated: 17 Oct 2023 9:15 PM GMT)

குஜிலியம்பாறையில் ஜீவனாம்சம் கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததால் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

குஜிலியம்பாறை மருதகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). பெயிண்டர். அவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கஜேந்திரன் (5) என்ற மகன் இருக்கிறான். இந்தநிலையில் மணிகண்டனுக்கும், கோகிலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் 2 பேரும், கடந்த சில ஆண்டுகளாக பிரிந்த வாழ்கின்றனர். கரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கோகிலா வசித்து வருகிறார்.

இந்தநிலையில் தனக்கு ஜீவனாம்சம் கேட்டு கரூர் கோர்ட்டில் கோகிலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் மணிகண்டன் கோர்ட்டுக்கு சென்று ஆஜரானார். அதன்பிறகு வீடு திரும்பிய அவர் விரக்தியுடன் காணப்பட்டார். இதனால் மனம் உடைந்த மணிகண்டன், அன்றைய தினம் இரவில் கொசுவர்த்தி மருந்தை குடித்து விட்டு வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story