பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை


பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 April 2023 6:45 PM GMT (Updated: 9 April 2023 6:45 PM GMT)

வெள்ளிச்சந்தை அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் ஆசாரிவிளையை சேர்ந்தவர் தங்கப்பன். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகிவிட்டது. கடைசி மகன் ராம்குமார் (வயது 34), பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ராம்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ராம்குமார் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ராம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story