பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை

திருக்குறுங்குடி அருகே பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள இறையடிக்காலை சேர்ந்தவர் வேல்மயில் மகன் கார்த்திக் (வயது 31). பெயிண்டரான இவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய கார்த்திக்கை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





