மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு

சேலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 24), பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது வீட்டில் பெயிண்டிங் அடித்தார். அப்போது 2-வது மாடியில் இருந்த கண்ணாடியை துடைத்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஹரிகரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





