மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு


மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு
x
சேலம்

சேலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 24), பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது வீட்டில் பெயிண்டிங் அடித்தார். அப்போது 2-வது மாடியில் இருந்த கண்ணாடியை துடைத்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஹரிகரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story