பெயிண்டர் தவறி விழுந்து சாவு


பெயிண்டர் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 3:29 PM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் பெயிண்டர் தவறி விழுந்து இறந்தார்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 50) பெயிண்டர். இவர் நேற்று காலை சுரண்டை அழகாபுரி பட்டணம் பகுதியில் ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க சென்றார். அங்கு உயரமான ஒரு நாற்காலியில் ஏறி நின்று சுத்தம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் சாமித்துரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலையா மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சாமித்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story