நண்பர்களுடன் மது அருந்திய பெயிண்டர் மர்ம சாவு


நண்பர்களுடன் மது அருந்திய பெயிண்டர் மர்ம சாவு
x

திருச்சி அருகே நண்பர்களுடன் மது அருந்திய பெயிண்டர் மர்மமான முறையில் இறந்தார். அவர் தாக்கப்பட்டதில் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

திருச்சி அருகே நண்பர்களுடன் மது அருந்திய பெயிண்டர் மர்மமான முறையில் இறந்தார். அவர் தாக்கப்பட்டதில் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர்

திருச்சியை அடுத்த வாத்தலை அருகே மணப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பாலமுருகன் (வயது 25), பெயிண்டரான இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பாலமுருகனை 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

மர்ம சாவு

இந்நிலையில் அன்று இரவு பாலமுருகனின் உடல்நலம் குன்றியதால் முசிறி அரசு மருத்துவமனைக்கு அவரது தந்தை கணேசன் சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மறுநாள் காலை பாலமுருகனின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன்சிங் மற்றும் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலமுருகன் நண்பர்களுடன் மது அருந்தும் போது, ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டதால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story