லாரி மோதி பெயிண்டர் படுகாயம்

லாரி மோதி பெயிண்டர் படுகாயம்
நெகமம்
பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் பிரேம்சந்த்(வயது 53). பெயிண்டர். இவர் தனது இருசக்கர வாகனத்தில் அனுப்பர்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த பிரேம்சந்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெகமம் போலீசார், உடுமலையை சேர்ந்த லாரி டிரைவர் மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





