பக்ரீத் பண்டிகை: சென்னையில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்


பக்ரீத் பண்டிகை: சென்னையில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 28 Jun 2023 1:55 AM GMT (Updated: 28 Jun 2023 4:48 AM GMT)

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை,

பக்ரீத் பண்டிகை நாளை (29-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜூன் 28) சென்னையில் இருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்புப் பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட பிற முக்கிய இடங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பஸ்கள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொண்டு தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story