பழனி கிரிவல பாதை வழக்கு- ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு


பழனி கிரிவல பாதை வழக்கு-  ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு
x

கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை,

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதில், பழனி கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என ஐகோர்ட்டு மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மேலும், பட்டா உள்ளவர்களை அனுமதிப்பது மற்றும் கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம் எனவும் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் சோதனைச்சாவடி பணிகளுக்கு தேவஸ்தானம் கோரும் போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story