பள்ளிபாளையத்தில் 3 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி

பள்ளிபாளையத்தில் 3 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பகலில் வெயில் அடித்தது. இதையடுத்து மாலையில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் 6 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதையொட்டி மின்சாரமும் 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதையடுத்து 3 மணி நேரம் பின்னர் இரவு 9 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் மின்சாரம் தடையால் பள்ளிபாளையம் நகரம் இருளில் மூழ்கியது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





