பஞ்சப்பிரகார உற்சவ விழா நிறைவு


பஞ்சப்பிரகார உற்சவ விழா நிறைவு
x

பஞ்சப்பிரகார உற்சவ விழா நிறைவுபெற்றது.

திருச்சி

சமயபுரம், மே. 24-

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐம்பெரும் உற்சவங்களில் முக்கியமானதாக கருதப்படும் பஞ்சப்பிரகார உற்சவ விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் தங்க கமலம், வெள்ளி குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மரஅன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத்துடன் பஞ்சப்பிரகார உற்சவ விழா நிறைவடைந்தது.


Next Story