நாடாளுமன்ற தேர்தல்: ஆரணி தொகுதியில் போட்டியிட போகிறேன்: மன்சூர் அலிகான் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தல்:  ஆரணி தொகுதியில் போட்டியிட போகிறேன்: மன்சூர் அலிகான் அறிவிப்பு
x

ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

சென்னை,

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்.

அண்மையில்தான் தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.


Next Story