வாகனம் மோதி புள்ளிமான் சாவு

வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.
திருப்புவனம்
பூவந்தி அருகே உள்ளது அரசனூர். இப்பகுதியில் வனத்துறை காடு உள்ளது. இங்கு மான்கள் அதிகம் வசித்து வருகின்றன. இவைகள் இரை தேடி சில சமயம் ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருமாஞ்சோலை மேல்புறம் நேற்று இரவு 2½ வயதுடைய புள்ளிமான் ஒன்று வந்தது. அந்த மான் சாலையை கடக்க முயலும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சிவகங்கை வனத்துறையினர் அங்கு சென்று மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அதை வனப்பகுதியில் புதைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





