சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனம் மோதி பலி

சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழந்தது.
சமயபுரம்:
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு புள்ளிமான் சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த அந்த மான், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.வெயிலின் காரணமாக தண்ணீரை தேடி அந்த மான் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





