கடைகளுக்கு அபராதம் விதிப்பு


கடைகளுக்கு அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 23 July 2023 12:30 AM IST (Updated: 23 July 2023 5:06 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜவகர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, பம்ப் ஹவுஸ் ரோடு, கே.சி. ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளா் பழனிசாமி தலைமையில், சுகாதார மேற்பார்வையாளா்கள் மாணக்கம், காளியப்பன் மற்றும் நகராட்சி பணியாளா்கள் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.5,600 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

1 More update

Next Story