ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்


ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
x

பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

சேலம்

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நேற்று சீரங்கம்பாளையத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். சங்க நிர்வாகி மதியழகன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பழனி கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் 1.1.2017-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய 15 சதவீத ஓய்வூதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மருத்துவப்படிகளை உடனே வழங்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story