சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் அவதி


சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் அவதி
x

சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் அவதி கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.

மயிலாடுதுறை


திருக்கடையூர்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னதி வீதி, தெற்கு வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள அரிசி, காய்கறி, பழ வகைகளை தின்று அட்டகாசம் செய்கின்றன. மேலும் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களையும் குரங்குகள் கடித்து வருகிறது. இதனால், மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, திருக்கடையூர் ஊராட்சி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story