மக்கள் குறைதீர்க்கும் முகாம்


மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:45 PM GMT)

திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகர், வட்ட உள்ளிட்ட 7 போலீஸ் நிலையங்கள் சார்பில் நேற்று திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் கலைவாணி, எஸ்.எஸ்.கோட்டை அந்தோணி செல்லத்துரை, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், திருப்பத்தூர் டவுன், நாச்சியாபுரம், கண்டவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், கீழச்சிவல்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுகளுக்கு, புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன், சிவாஜி பாண்டியன், விஜய், பெரியசாமி, கலையரசன், காளீஸ்வரி, சேதுபாமா, மற்றும் போலீசார் பங்கேற்று விசாரணை மேற்கொண்டனர். முகாமில் 300 மனுக்கள் விசாரணை மேற்கொண்டதில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.


Next Story