மக்கள் குறைதீர் முகாம்


மக்கள் குறைதீர் முகாம்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முடிகண்டநல்லூர் ஊராட்சியில் மக்கள் குறைதீர் முகாம் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடந்தது

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சி திருச்சம்பள்ளி கிராமத்தில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுமதிஸ்ரீதர், துணைத்தலைவர் பாரதி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் துறை வருவாய் அலுவலர் மரிய ஜோசப் ராஜ் வரவேற்றார். இதில் ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக 70, மனுக்கள் பெறப்பட்டது. இதில் ஒரு சில மனுக்கள் தவிர மற்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story