திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு


திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவிர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சினைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 89 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 29 மனுக்களும், பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 43 மனுக்களும், இதர துறைகள் சார்பாக 69 மனுக்களும் என மொத்தம் 268 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story