பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா


பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா
x

பொன்னமராவதி அருகே பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஏராளமான மீன்களை அள்ளிச் சென்றனர்.

புதுக்கோட்டை

மீன்பிடி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கண்மாயில் திரண்டனர்.

இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் வெள்ளை துண்டு வீசி திருவிழாவை ெதாடங்கி வைத்தனர்.

சமைத்து சாப்பிட்டனர்

தொடர்ந்து கிராமமக்கள் ஒன்றிணைந்து கண்மாயில் இறங்கி போட்டிப்போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கிராமமக்கள் கெண்டை, கெளுத்தி, இறால், ஜிலேபி உள்ளிட்ட ஏராளமான மீன்களை பிடித்தனர்.

இதையடுத்து தங்களுக்கு கிடைத்த மீன்களை கிராமமக்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


Next Story