அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி மனு - மதுரை ஐகோர்ட்டில் நாளை விசாரணை


அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி மனு  -  மதுரை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
x

மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மதுரை,

அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனு மீது நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது

மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம்முதலே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் ,

மாநாட்டிற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய தடையில்லா சான்று பெறவில்லை.ஏராளமானோர் மாநாட்டிற்கு வருவர் என கூறப்பட்டுள்ளதால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும்.மாநாட்டிற்கு வருவோரால் அதிக அளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதிக்க கூடாது.என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனு மீது நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது.நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் , பரத சக்கரவர்த்தி அமர்வில் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது


Next Story