வரதராஜ பெருமாள் கோவிலை சீரமைக்க அமைச்சரிடம் மனு


வரதராஜ பெருமாள் கோவிலை சீரமைக்க அமைச்சரிடம் மனு
x

வரதராஜ பெருமாள் கோவிலை சீரமைக்க பொதுமக்கள் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிரப்பாக்கம் அருகே உள்ளது பாபுராயன்பேட்டை. இந்த ஊராட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 1000 வருடம் பழமை வாய்ந்த விஜய வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். தற்போது விஜய வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் பழமை வாய்ந்த கல் தூண்கள் இடிந்து விழுந்து முட்புதர்கள் கோயிலின் உள்ளே வளர்ந்து காணப்படுகிறது.

எனவே விஜய வரதராஜ பெருமாள் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு செய்ய ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர் சிவகுமார் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் பேரில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு செய்ய விரைவில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story