தந்தை சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகன் புகார்


தந்தை சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகன் புகார்
x

தந்தை சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகன் புகார்

ஈரோடு

ஈரோடு, ஜூன்.7-

மொடக்குறிச்சி அருகே உள்ள நாதகவுண்டன்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி (வயது 37) என்பவர் தனது உறவினர்களுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனது தந்தை முத்துசாமி கடந்த 10 ஆண்டுகளாக மோளகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி எனது தந்தை வேலை செய்யும் மில்லில் குப்புற விழுந்து இறந்து கிடந்தார். அவரை நாங்கள் தூக்கி வந்து கட்டிலில் போட்ட போது அவரது முதுகு, கால்கள், முகம் என அனைத்து இடங்களிலும் தீக்காயம் போல் இருந்தது.

இதைத்தொடர்ந்து நாங்கள் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் கொடுத்தோம். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, முதல் தகவல் அறிக்கையில் எனது தந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தனர். மேலும் எனது தந்தை பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் எந்த காரணத்திற்காக உயிர் இழந்தார் என்று குறிப்பிடாமல் உள்ளது. இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் இயற்கையான முறையில் இறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Related Tags :
Next Story