நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 14 Feb 2023 7:30 PM GMT (Updated: 14 Feb 2023 7:30 PM GMT)
நாமக்கல்

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எருமப்பட்டி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, காவக்காரப்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதேபோல் காளப்பநாயக்கன்பட்டி துணைமின் நிலையத்திலும் நாளை மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல் மற்றும் துத்திக்குளம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மெட்டாலா

இதேபோல் மெட்டாலா துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடப்பதால் பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார் கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன்சோலை, பெரியகுறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர் கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று ராசிபுரம் மின் கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளனர்.


Next Story