தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

தேனி உள்பட 8 துணை மின் நிலையங்களில் ஒரே நாளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மாவட்டத்தில் பல இடங்களில் நாளை மறுநாள் மின்சாரம் நிறத்தப்படுகிறது.

தேனி

8 துணை மின் நிலையங்கள்

தேனி கோட்டத்தில் தேனி, வீரபாண்டி, தேவாரம், போடி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபோல், சின்னமனூர் கோட்டத்தில் உள்ள கம்பம், மார்க்கையன்கோட்டை, சின்னஓவுலாபுரம், காமாட்சிபுரம் ஆகிய 4 துணை மின் நிலையங்களிலும் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாவட்டத்தில் ஒரே நாளில் 8 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மின்சாரம் நிறுத்தம்

அதன்படி காமாட்சிபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

அதுபோல், தேனி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம், வீரபாண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், வீரபாண்டி, உப்பார்பட்டி, சடையால்பட்டி.

தேவாரம்

தேவாரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, பி.ஆர்.புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி.

போடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி ஆகிய பகுதிகளுக்கும் நாளை மறுநாள் மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவல்களை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன், சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story