காஞ்சீபுரத்தில் திட்டக்குழு கூட்டம்


காஞ்சீபுரத்தில் திட்டக்குழு கூட்டம்
x

காஞ்சீபுரத்தில் திட்டக்குழு கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

இதில் உறுப்பினர்களின் ஆதரவுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட திட்டக்குழு தலைவர் ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story