கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு


கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
x

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர்

திருநெல்வேலி

நெல்லை:

ஆண்டுதோறும் மே மாதம் 21-ந்தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி உதவி கலெக்டர் குமாரதாஸ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தியாகராஜன், ஆய்வு குழு அலுவலர் மூர்த்தி, கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உதவி ஆணையாளர் (கணக்கு) சொர்ணலதா தலைமையில் அலுவலர்கள், ஊழியர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். இதில் மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.


Next Story